மருதங்கேணி வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் பாதிப்பு அம்புலன்ஸ் வண்டியினுள் பிரசவம்



புனரமைக்கப்பட்ட பின்பும் திறக்கப்படாத வைத்தியர் விடுதி

மருதங்கேணி வைத்தியசாலையில் வைத்தியரும் தாதியர்களும் இன்மையால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காகச் சென்ற கர்ப்பவதி ஒருவர் இடைவழியில் வாகனத்தினுள் பிரசவித்த பரிதாபகர சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை அம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை பிறந்த உடன் கவனிக்கப்படாமையினால் மயக்கமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. வைத்தியரும் தாதியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் மாலை 3 மணிக்கே சம்பவ தினத்தன்று வைத்தியசாலையை ப+ட்டிவிட்டு தமது வீடுகளுக்குச் சென்றுள்ளமையினால் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-
மருதங்கேணி வைத்தியசாலையிலிருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கட்டைக்காடு கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவரை பிரசவ வலியுடன் பிரசவத்திற்காக குறித்த வைத்தியசாலைக்கு கணவன் அழைத்துச் சென்றுள்ளார்.

எவருமே இல்லாத நிலையில் குறித்த வைத்தியசாலை ப+ட்டப்பட்டு இருந்துள்ளது. ஆனால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அம்புலன்ஸ் சாரதியும் அவருடைய உதவியாளரும் பெண்ணின் பரிதாப நிலையை கண்டு பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை (மந்திகை) க்கு உனடியாகவே அழைத்துச் சென்றுள்ளனர்.

மருதங்கேணியிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அம்பன் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும்போது குறித்த பெண் அம்புலன்ஸ் வண்டியினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இப்பெண்ணுடன் உதவிக்குச் சென்ற அவருடைய தாயார் பிரசவ வலியால் மகள் வேதனைப்படும்பொழுது மயக்கமடைந்துள்ளார். இதனால் தென்பகுதியைச் சேர்ந்த அம்புலன்ஸ் சாரதியும் அவருடைய உதவியாளரும்  பலத்த சிரமத்தின் மத்தியில் மந்திகை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பிரசவித்தவுடன் குறித்த குழந்தைக்குரிய சிகிச்சை அளிக்கப்படாமையால் மயக்கமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

மருதங்கேணி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் ஊழியர்களும் நோயாளர்களின் நலனில் அக்கறையுடன் செயலாற்றாது கடமை நேரத்திற்குமுன்னராகவே வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதால் இதுபோன்ற பல இடர்களை குறித்த பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் யாழ்.பிராந்திய  சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பொழுதும் கடந்த இரண்டு வருடங்களாக இதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென பிரதேச மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை இவ் வைத்தியசாலையின் வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, ஊழியர் விடுதி என்பன நவீன முறையில் புனரமைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளின் வருகைக்காக திறக்கப்படாமல் இருக்கின்றமையினால் வைத்தியர்கள், ஊழியர்கள் அங்கே தங்கியிருந்து பொது மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்கமுடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


வளங்களைச் சுரண்டும் திணைக்களங்கள்! அபிவிருத்தி எதுவுமில்லை! வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்புகள்


வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள வளங்களைச் சுரண்டுவதில் அரச திணைக்களங்களும், நிறுவனங்களும் குறியாக இருக்கின்றார்களே தவிர, பிரதேச அபிவிருத்திக்கென எதனையும் செய்வதில்லை என இந்தப் பிரதேச பொது அமைப்புகள் பலவும் குற்றம் சாட்டியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மிகவும் பெறுமதிமிக்க வளங்களாக காடு, மணல், நன்னீர், மீன்வளம் ஆகியன உள்ளன.

இவை அனைத்தும் எமது மாவட்டத்தைச் சேர்ந்த திணைக்களங்கள், நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றன. இதேபோல் மீன்வளமும் தென்பகுதி, இந்திய மீனவர்களால் அபகரிக்கப்படுகின்றன.

1950களுக்கு முன்னர் இப் பிரதேச மணல் வளத்தினை வைத்துக் கொண்டு கண்ணாடித் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அக்கால கட்டங்களில் வெளியான புவியியல் பாடப் புத்தகங்களிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க அரசோ, தனியார் நிறுவனங்களோ முன் வரவில்லை. அதற்கு மாறாக கடந்த 60 ஆண்டுகளில் இந்தப் பிரதேச மணல் வளம் முற்று முழுக்க சூறையாடப்பட்டுள்ளது.

எத்தனையோ மணல் பிட்டிகளிலிருந்து அடி நிலத்தோடு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காட்டு வளங்களும் விறகுகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. மணற்காட்டில் உருவாக்கப்பட்ட சவுக்கு மரக் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இங்குள்ள நன்னீரும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பிரதேசங்களுக்கு குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அதற்கான குழாய் கிணறுகளையும், தண்ணீர்த் தாங்கியையும் அமைக்கவென அப்பிரதேசத்தில் உள்ள நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

இப் பிரதேசத்தின் ஆழ்கடலான வங்காள விரிகுடாவில் மீன்பிடித் தொழிலில் தென் பகுதி மற்றும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதிகம். இதில் தென் பகுதி மற்றும் மீனவர்களின் ஆக்கிரமிப்பே மிக அதிகமாகும்.

பிரதேச வளங்களை சுரண்டப்படுகின்றதே தவிர ஏனைய பிரதேசங்களுக்கு ஈடாக இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தப் பிரதேசத்துக்கான ஒரே ஒரு நெடுஞ்சாலையான பருத்தித்துறை மருதங்கேணி கட்டைக்காடு வீதி சரியான முறையில் திருத்தி அமைக்கப்படவில்லை.

எக்காலமும் குன்றும் குழியுமாக மிகவும் பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக நோயாளிகளைக் காவிச் செல்கின்ற அம்புலன்ஸ் வண்டி கூட பெரும் சிரமத்திற்கு மத்தியலேயே பயணத்தை மேற்கொள்கின்றது.

இதேபோல் வேறு எந்தவிதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று மேலும் கூறப்பட்டது.

மாணவர்கள் மீதான தாக்குதலும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளும்





கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடாத்தினர். இந்தச் சம்பவமானது யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் மாத்திரமன்றி நாடளாவியரீதியில் இருக்கின்ற சகல பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இந்த விடயமானது தமிழ்மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த அராஜக  செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளதை காணககூடியதாக இருக்கிறது.

யாழ் கல்விச் சமூகத்தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய விடயம் அல்ல அவ்வப்போது பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்படுவதும் இடம்பெற்று வந்துள்ளன. அத்தோடு விசாரணைகளுக்காகவென பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படுவதும் வழமையான ஒரு விடயமாக ஏற்கெனவே காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்து மூன்றுவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறு மாணவர் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தையும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதே உண்மை.

நாட்டில் சிறுபான்மை என்ற எவரும் கிடையாது அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகளே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் வடக்கில் தொடர்ந்தும் அடக்குமுறைகளும் அட்டகாசங்களும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி தமிழர்களை குடைந்தெடுக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த 27 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் நான்கு மாணவர்களையும் குற்றப்புலனாய்வினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

வருடம்தோறும் கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் தமிழர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி உணர்வலைகளோடு யுத்தத்தால் மரணித்த தமது உடன்பிறப்புகளுக்காக வழிபடுவது வழமை. அத்தோடு இந்தியா உட்பட பல மேற்குலக நாடுகளிலும் இந்த கார்த்திகை மாத நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவது யாவரும் அறிந்த விடயமே. யுத்த காலத்தின்போது இந்த மாதத்தில் அரசாங்கம் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதும் நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழமையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சூழல் தோன்றியிருப்பதாக அரசாங்கமே கூறுகின்றது. இந்த நிலையில் வடக்கில் மாத்திரம் ஏன் இப்படி அராஜகம் இடம்பெறுகிறது?

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவது என்பது ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் கட்டாய நிகழ்வாகும். இலங்கையிலும் யுத்தத்தில் இறந்த படைவீரர்களை நினைவுகூருகிறNhம். அந்தவகையில் தமிழர்கள் தமக்காய் இறந்தவர்களை கார்த்திகை 27 ஆம் நாளில் நினைவுகூருகின்றார்கள்.

இவ்வாறான ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் படையினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் தீபம் ஏற்றி கார்த்திகை வீரர்களை நினைவு கூருவார்கள். அவ்வாறே கடந்த 27 ஆம் திகதி மாணவர்கள் கார்த்திகை வீரர்களை நினைவு கூருவதற்கு தயராகிக் கொண்டிருக்கையில், பல்கலைக்கழக விடுதிகளுக்குள் அத்துமீறி புகுந்த ஆயுதக்குழு தமது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. மாணவர்கள் மாணவிகள் என்று பேதம் பார்க்காமல் அவர்களின் அறைகளுக்குள் நுழைந்து ஏற்றிவைக்கப்பட்ட கார்த்திகை தீபங்களை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள் அறைகளை அடித்து நொருக்கினர். சற்றும் ஏதிர்பார்க்காத மாணவிகள் பலர் ஆயுதக் கும்பலைப் பார்த்து பயத்தில் மயக்கமுற்று வீழ்ந்தனர்.

ஆயுக்குழுவின் இந்த அட்டூழியத்தைச் சகிக்கமுடியாத மாணவர்கள் பலர் எதிர்ப்பை வெளியிட்டனர். இது கைகலப்பாக மாறியது. அத்துடன் மாணவர்கள் கற்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவ்வாறு அன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் நடந்த சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதக்குழு அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியதைக் கண்டித்து சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் 28 ஆம் திகதி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அவர்கள் பேரணியாக விஞ்ஞான பீடத்துக்குச் செல்ல முயன்றனர். 27 ஆம் திகதி முதலே பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் குவிக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்களின் பேரணியை இடை மறித்தனர். அப்போது மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

'ஆரம்பத்தில் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் தடிகளாலும் பொல்லுகளாலும் எங்களைத் தாக்கத் தொடங்கினர் நாங்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்த போது அவர்கள் எம்மைத் துரத்தித் துரத்தி தாக்கினார்கள் மாணவர்கள் சிலர் கீழே விழுந்தார்கள் அவர்களைப் பொலிஸார் தமது சப்பாத்துக் கால்களால் மிதித்துக் காயப்படுத்தினார்கள். இவர்களது தாக்குதல்களுக்கு மாணவிகள் மட்டும் விதிவிலக்கல்ல மாணவிகள் என்றுகூடப் பார்க்காமல் அவர்கள்மீதும் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் பதினைந்து மாணவர்கள் வரை காயமடைந்தார்கள் மாணவிகள் உட்பட எட்டுப்பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நான்கு மாணவர்களை பொலிஸார் அவ்விடத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் பேராசிரியர்களும் துணைவேந்தரும் பொலிஸாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்கள் இராணுவத்தினர் மீதும் பொலிஸார்மீதும் கற்களையும், போத்தல்களையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதை அடக்குவதற்காகவே இந்ந தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 30ஆம் திகதி யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ப. தர்ஷானந் (வயது 24), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க. ஜெனமேனன் உட்பட நான்கு மாணவர்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருநெல்வேலி சிறி ரெலோ கட்சி அலுவலகத்தின்மீது பெற்றNhல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை மற்றும் மாவீரர்தின போஸ்டர்கள் ஒட்டியமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல எதிர்ப்பலைகள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எழும்ப ஆரம்பித்துள்ளன.  இத்தாக்குதல் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டது. சபையில் சுமந்திரன் எம்.பி. நாட்டில் சட்டம் ஒரு பாரதூரமான நிலைமையை முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித்துறையின் சுயாதீனத் தன்மை பாதாளத்தை நோக்கிச் செல்கிறது. இப்போது யாழ். பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து பெண்கள் விடுதிக் கதவுகளை உடைத்து கட்டில்களை நொருக்கியுள்ளனர் இவ்வாறான மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

'தமிழர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன இதன் ஒரு அங்கமே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல். பல்கலைக்கழக மாணவர்களை அடக்கியாள நினைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை அவிழ்த்துவிட்டு பழிதீர்க்கிறது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவும் தன் பங்கிற்கு கவலை வெளியிட்டுள்ளது. அமைதியாக மேற்கொள்ளப்படும் பேரணிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இலங்கை அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தூதரகம் ஆழ்ந்த கவலை அடைகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்துகின்றNhம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்தும் மாணவர்களுக்கு ஆதரவாய் பல குரல்கள் எழுந்துள்ளன. நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் ' மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையானது காட்டுமிராண்டித்தனமானது. புனிதமான கார்த்திகை நாளை நினைவுகூருவது தமிழர்களின் கடமையாகும் இதை திட்டமிட்டு தடுக்கும் செயலே மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்" என தெரிவித்துள்ளார். இதேவேளை தி.மு.க. தலைர் கருணாநிதி ' யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கார்த்திகை தீபத்தையொட்டி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் வீடுகளில் ஏற்றிவைத்த தீபத்தைக்கூட அடித்து நொருக்கி ஈழத்தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளமையை கண்டிக்கிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சஞ்சீவ பண்டார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்' யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பை வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த திங்கட்கிழமை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். கிழக்குப்பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக முன்றலில் இடம்பெற்ற எதிர்ப்பார்ப்பாட்டத்தில். 'பல்கலைக்கழகம் என்பது போர்க்களமா?", ' இலங்கை அரசே பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்", 'இராணுவமே மாணவர் சக்தியை முடக்க முயற்சிக்காதே" எனப் பல சுலோகங்களை மாணவர்கள் எழுப்பினர். பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்கு திரும்புவது என்றால் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் உட்பட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரியும் யாழ்.நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று யாழில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் நவசமசமாஜக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிஸ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு இராணுவம், பொலிஸாரினது அடக்குமுறைகளை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தினர். தமிழ்ப்பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி சகல தமிழ்க் கட்சிகளும் ஒப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றையும் அனுப்புவதற்காக இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'சர்வதேசமே சுய நிர்ணய உரிமையுடன் தமிழ் தேசத்தை அங்கீகாரம் செய்", 'யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கின்றNhம்",'விடுதலை செய் விடுதலை செய் மாணவர்களை விடுதலை செய்", 'தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்காதே", 'தமிழ் மாணவர்களை சுதந்திரமாகக் கல்வி கற்க விடு",  போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைககளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சமூகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அவர்களை நம்பிக்கை அடைய வைத்துள்ளன. கடந்த காலங்களிலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. அப்போதெல்லாம் இந்த அளவிற்கு அவர்களுக்கு ஆதரவுக்குரல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது எழுந்துள்ள எதிர்ப்பலைகள் தமிழ் மக்கள் இதயங்களில் பாலை வார்த்துள்ளன.

எஸ்.ரகுதீஸ்


தொண்டு நிறுவனம் வழங்குகின்ற நிதியுதவி வீடுகள் அமைக்கப்போதுமானதாக இல்லை



வடமராட்சி கிழக்கு மக்கள் ஆதங்கம்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகை குறித்த வீடுகளை அமைக்கப் போதுமானதாக இல்லையெனவும் தமக்குத் தரப்படுகின்ற பணத்தைக் கொண்டு வீடமைப்பதற்குரிய பொருட்களைக் கூடக் கொள்ளவனவு செய்யமுடியவில்லை எனவும் அப்பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்கமைய ஒவ்வொரு வீடுகளுக்கும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இப்பணத்தினைக் கொண்டு பகுதியளவு வீட் டைக் கூட அமைக்கமுடியாத நிலையில் அப்பிரதேச மக்கள் அல்லலுறுகின்றனர்.
இப்பிரதேசத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம், அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் 500 வீடுகளும் சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் 500 வீடுகளும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 90 வீடுகளும் தற்பொழுது அமைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் பணத்தொகை வீடமைப்புக்கு போதுமானதாக இல்லை என்பதால் வீடுகளை அமைப்பதில் பயனாளிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். சில வீடுகளுக்கான அத்திபாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவ் வீடுகளை அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என அம் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் வீடு கட்டுவதற்குரிய கல், மண், சீமெந்து போன்ற பொருட்களை உரிய இடங்களிற்குக் கொண்டு செல்வதற்கு வீதிகளின்மையால் போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் வீடுகளை அமைக்க முன்னராக போரால் பாதிப்படைந்துள்ள அப்பிரதேச வீதிகள் புனரமைக்கப்படவில்லை. இதனால் வீட்டுத்திட்டப் பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களை  எதிர்கொள்கின்றனர்.
எனவே இதற்கு மேலதிகமான கொடுப்பனவு வழங்கி உதவுமாறு சம்பந்தப்பட்ட அரச, அரசசார்பற்ற அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போர் அனர்த்தம், ஆழிப்பேரலை என்பவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்கள் வீடுகளை அமைப்பதற்கு உரிய பணக் கொடுப்பனவை வழங்கவேண்டுமென பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கூடங்குளம் அணு உலை ஆபத்துக்கும் எமக்கும் வெகுதூரமில்லை


 கூடங்குளம் போரட்டம் என்பது இப்போது இந்திய ஊடகங்களில் அதிகம் அடிபடும் பெயராக உள்ளது. அது மெல்ல மெல்ல பரவி இப்போது இலங்கை உள்ளிட்ட சர்வதேசங்களிலும் பேசப்படும் விடயமாக மாறிவிட்டது. இலங்கையை பொறுத்தவரை மக்கள் அனைவரும் இதை ஒரு இந்திய விவகாரமாகவே கருதி வந்தனர். ஆனால் அது இலங்கையையும் பாதிக்கும் மிகப்பெரிய விடயம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாட்டின் மீன்வளம் மிக்க கரையோர மாவட்டமான திருநல்வேலி மாவட்டத்தின் கூடங்குளம் என்னும் ஊரில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்யாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்துக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டில் அப்போது பிரதமராயிருந்த ராஜீவ் காந்தியாலும் ரஷ்ய பிரதமராயிருந்த மிக்கையில் கொர்பச்சோவினாலும் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்ட பிளவுகளாலும், அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததாலும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கூடங்குளம் அணுமின் திட்டம் 2001 ஆம் ஆண்டில் மீண்டும் கைச்சாத்திடப்பட்டது. இதன் மதிப்பு இலங்கை பணத்தில் 34,0375 கோடியாகும்.

ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து கடல் வழியாகக் கொண்டுவரப்படும் அணுமின் நிலையத்துக்கான பாகங்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தரை மார்க்கமாக கூடங்குளத்துக்கு கொண்டுவருவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் கூடங்குளத்தில் சிறிய அளவிலான துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டது. இந்தியாவின் அதி சக்தித் திறன் வாய்ந்த அணுமின் நிலையமாக கூடங்குளம் திகழும் என்பது இந்திய அரசின் கனவாக இருக்கிறது.

இவ் அணுமின் நிலையத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் எதிர்ப்பலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் யப்பான் புகுஷிமா, டச்சி போன்ற நகரங்களில் அணுமின் நிலயங்களின் களிவு மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட அணுஉலைக் கசிவு மற்றும் இதன் விளைவால் யப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் தமது அணுமின் உலைகளை மூடியமை போன்ற சம்பவங்கள் இத் திட்டத்துக்கு இருந்த எதிர்ப்பலைகளை சுனாமிப் பேரலையாய் மாற்றியது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற கரையோரப் பிரதேச மக்கள் பெரும் எதிர்ப்புப் போரட்டங்களை ஆரம்பித்தனர். உடனடியாக இவ் அணுமின் நிலையத்திட்டத்தை கைவிடும்படி மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் அறைகூவல் விடுத்தனர். இவர்களுக்கு சில அரசியல்வாதிகளும் ஆதரவுக் குரல் எழுப்பினர். இப் போராட்டங்களுக்கு உதயகுமார் என்பவர் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கடலில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டப் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்தினார்கள். மணப்பாட்டில் நடந்த போராட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கெண்டனர். இதனால் பலர் காயமடைந்தனர். அந்தோனியான் என்பவர் பொலிஸாரின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியாகி உயிரிழந்தார்.

ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் இப்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அதிலும் அங்குள்ள முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்பிக்கொள்ள அணுசக்தி ஒழுக்காற்று ஆணையம் அனுமதி கொடுத்த பிறகு, அங்குள்ள மக்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இறுதி யுத்தம் என்கிற பெயரில் மக்கள், போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் திணறுகின்றன.

நடப்பவை எல்லாம் எல்லை மீறிச் செல்வதை உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீனவர்களை சமாதானப்படுத்த கச்சதீவு விவகாரத்தைக் கையிலெடுத்தார். மீனவர்களைக் காப்பாற்ற ஒரே வழி கச்சதீவை மீட்பதுதான் எனத் தீர்மானித்தார். எனவே 2008 ஆம் ஆண்டில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி இன்னொரு மனுவைத் தாக்கல் செயப் போவதா அறிக்கை வெளியிட்டு, மீனவ மக்களை தன்பால் வசப்படுத்த எத்தணித்தார்.

ஒரு வருடமாக இந்த விடயத்தில் மௌனமாகவிருந்த கலைஞர் கருணாநிதி கடந்த மாதம் 13 ஆம் திகதி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அணுமின் நிலையப் போராட்டம் தற்போது போராட்டக்காரர்கள் கையை விட்டு பொதுமக்களின் கைகளுக்குப் போவிட்டது. நடந்ததை விட்டு விட்டு நடப்பது நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேச வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நினைக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை இலங்கையிலும் குடிகொள்ள ஆரம்பித்துள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள ஆகக்குறைந்த தூரம் 74 கிலோமீற்றர் மாத்திரமே. அதுவும் வடக்கின் மன்னார் பிரதேசம் இந்தியாவிலிருந்து ஆகக் குறைந்த தொலைவில் உள்ளது. இதனால் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் இவ் அணுஉலை தொடர்பில் பெரும் அச்சம் நிலவ ஆரம்பித்துள்ளது.

இந்த அணு உலையில் கசிவோ அல்லது வெடிப்போ ஏற்பட்டால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு இலங்கையைத் தாக்கக்கூடிய சந்தர்பப்ம் அதிகமுண்டு. அதுவும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். கதிர்வீச்சின் தாக்கம் பல சந்ததிகளுக்கு நீண்டு செல்லும். இவ்வாறான சம்பவங்கள் பல வெளிநாடுகளில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மன்னார் ஆயர் ராயப்பு யோசப்பின் பிரதிநிதி வண. ஜெயபாலன் குரூஸ், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஐக்கிய சமவுடமைக் கட்சி பொதுச்செயலர் சிறிதுங்க ஜெயசூரிய உள்ளிட்ட குழுவினர் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவைச் சந்தித்து இவ் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினர்.

இச் சந்திப்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், அணுமின் நிலயத்திலிருந்து கழிவுகள் அகற்றப்படுவது தொடர்பிலும் எழுந்துள்ள கேள்விகள் இந்தியத் தூதுவரிடம் எழுப்பப்பட்டது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பாக மன்னார் மக்கள் கொண்டுள்ள அச்சம் தொடர்பிலும் இந்தியத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் எழுத்துமூல ஆவணம் ஒன்றும் குறித்த குழுவினரால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தமிழக முதல்வருக்கும் இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது.

கூடங்குளம் அணுமின் உலையின் ஆபத்து தொடர்பில் உணர்ந்த தென்னிந்திய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து எமக்கு வெகு தூரமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்க்காமல் அதனால் எமக்கும் உள்ள பாதிப்பை உணரவேண்டும். தமிழக மக்களின் போராட்டத்துக்கு நாமும் தோள்கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நிகழவுள்ள ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

எஸ். ரகுதீஸ்

யாழ். பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடி!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு தரப்பினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் உருவெடுத்துள்ளதை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தடியடி நடத்தி வருகின்றனர் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் மாணவர்களில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை, செய்திச் சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததை கண்டித்து, இன்றைய தினம் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கறுப்புத்துணி அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு விரைந்த சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சைச்சாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.


இது தொடர்பில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் - தமிழ்மிரர் தொடர்புகொண்டு கேட்டபோது, “அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸார் அங்கிருந்து அமைதியான முறையில் கலைத்ததாகவும், இதன்போது பாதுகாப்பு தரப்பினரால் தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என்றும் மாணவர்களோ அல்லது ஊடகவியலாளர்களோ பாதிக்கப்படவில்லை“ என்றும் கூறினார்.

அவுஸ்திரேலியா செல்லும் கனவால் அல்லலுறும் நம்மவர்கள்


 சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முற்பட்டவர்கள் பலர் பொலிசாரால் கைது. இதுதான் அண்மைக்காலம் பத்திரிகைகளில் அதிகம் வெளியாகும் செய்தி. இதை ஓர் செய்தியாக மட்டும் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தச் செய்திக்குப் பின் பலரின் கண்ணீரும் கவலையும் புதைந்துள்ளதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.



|நான் ஒரு கப்பல் காரரிட். என்ர தொழிலை விற்றும், தெரிந்தவர்களிடம் 5 இலட்சம் கடன் வாங்கியும் மொத்தம் 10 இலட்சம் கொடுத்து அவுஸ்திரேலியா செல்லத் தயாராகி நீர்கொழும்பில உள்ள ஒரு இடத்தில் கப்பலுக்காக காத்துக்கொண்டு இருந்தோம். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து அங்கிருந்த நான் உட்பட 30 இற்கும் அதிகமானோரை கைதுசெய்திட்டினம். இரண்டு கிழமை நான் ஜெயில்ல இருந்து பிணையில வெளியில வந்திருக்கிறன். இனிமேல் நான் தொழில் செய்ய கடல்தொழில் உபகரணமும் இல்லை. கடன் கொடுக்க வழியுமில்லை. என்ன செய்யிறதெண்டு தெரியவில்லை| என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்றnhழிலாளி ஒருவர் மன வருத்தத்துடன் தான் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட கதையை பகிர்ந்து கொண்டார்.

இவர் மாத்திரமன்றி நாளுக்கு நாள் பல குடும்பங்கள் இந்த அவுஸ்திரேலியா செல்லும் ஆசையால் நாதியற்று தவிக்கிறார்கள். அவ்வாறு அவர்களின் நிலையை கண்ணெதிரே பார்த்தும் இன்னமும் பலர் அவுஸ்திரேலியா மோகத்ததுடன் தான் இருக்கிறார்கள். ஒருசிலர் பாதுகாப்பற்ற முறையில் பல இன்னல்களை சந்தித்து அவுஸ்திரேலியா சென்றாலும் அவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏற்கின்றதா என்று பார்த்தால் அதுவும் கோள்விக்குறிதான். அண்மையில்கூட 10 இற்கும் அதிகமானோரை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளதை பல ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. அவ்வாறில்லாவிடில் அவுஸ்திரேலியாவுக்கு பக்கத்திலுள்ள தீவுகளில் கொண்டு சென்று விடுகின்றது அந்நாட்டு அரசாங்கம். இவற்றையெல்லாம் அறிந்தும் நம்மவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்கள் ஏன் இந்த விசப் பரீட்சையை மேற்கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்து அமைதியான சூழல் நிலவுகின்றது. அன்றாடம் நிகழ்ந்த உயிரிழப்புக்கள் குறைவடைந்துள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் அடுத்து நம்மைச் சுற்றியுள்ள வழங்களைப் பயன்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதே சிறந்ததாகும். அதைவிடுத்து மீண்டும் ஒரு துன்ப நிலையைத் தேடிச்செல்வது துரதிஷ்டமாகும். இவ் அவுஸ்திரேலியா பயணத்தால் கப்பல் கவிழ்ந்து பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளமையை மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.

இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 2588 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் அதிகமானோர் தமிழர்கள். அதிலும் வடக்குக் கிழக்கை சேர்ந்தவர்கள். அவுஸ்திரேலியா செல்ல முயன்று அங்கு போய்ச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைந்த தொகையினரே. ஆனாலும் அங்கு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ப+ர்த்தியாகியதா என்பது கேள்விக்குறியே.

மக்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதில் பல முக்கிய பதவிகளில் இருப்பவர்களும் பங்கு வகிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. இவர்களின் ஒரே இலக்கு பணம் தான். பல இலட்சங்களை வாங்கிக்கொண்டு மக்களின் உயிரைப்பற்றி சிந்திக்காது ஆசைவார்த்தைகளைக் காட்டி அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிலர் பணத்தை வாங்கிவிட்டு அவுஸ்திரேலியா அனுப்புவதாக வரவளைத்து பொலிஸாரிடம் மாட்டி விடுகிறார்கள் என்பது திடுக்கிடும் உண்மை.

அரசைப் பொறுத்தவரை இச் சட்டவிரோத நடவடிக்கையை தடுப்பதில் பெரும் முனைப்புக்காட்டி வருகிறது. வெளியேறும் மக்கள் நம்நாட்டைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தமது இருப்பைத் தக்கவைப்பதற்காக நம் நாட்டின் பெயரை கெடுப்பதாக அரச தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். படகுகளை மடக்கிப் பிடித்து குற்றப்புலனாய்வினரிடம் ஒப்படைக்கின்றனர். அத்துடன் திருப்பி அனுப்பப்பட்டவர்களிடமும் கடும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்பவர்களை கட்டுப்படுத்த இலங்கை கரையோர பாதுகாப்பு படையினர் ஏனைய நாடுகளின் கரையோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து விசேட கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் லெப்டினன்ட் கமான்டர் புலே கொட ஆராச்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற வகையிலும் சட்டவிரோதமான முறையிலும் ஏனைய நாடுகளுக்குள் பிரவேசிப்பது பாரிய குற்றமாகும். அண்மைக்காலமாக இலங்கையர்கள் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் அஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதை இலங்கையர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறன நடவடிக்கை இடம்பெறுவதை தடுப்பதற்கு ஏனைய நாடுகளுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா அரசாங்கமும் சட்டவிரோதமாக நமது நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதிகமானோரை திருப்பி அனுப்பியுள்ளது. ஏனையோரை கொக்கோஸ், நவுறு தீவுக்கு அனுப்புகின்றது. இந்தத் தீவுகளில் மக்கள் எதிர்பார்த்துச் சென்ற எதுவும் இல்லை. இதனால் தாமாக பலர் விரும்பி திரும்பி வருகின்றார்கள்.

இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் வதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும் இவ்வாறு அவுஸ்திரேலியா செல்வதில் முனைப்புக் காட்டி வருகின்றார்கள். அண்மையில் இந்தியாவிலிருந்து கேரளா வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 55 இலங்கை அகதிகள் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 15 சிறுவர்ககும் அடங்குகின்றனர்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் உயிரை துச்சமென மதித்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வோரில் 90 வீதத்தினர் கைதுசெய்யப்பட்டு வருகின்ற போதிலும் இன்னமும் மக்கள் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நம் நாட்டில் தொழில் இன்றி பலர் கஷ்டப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர் யுவதிகளே. இவர்கள் மத்தியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற விரக்கியான மனநிலையே காணப்படுகிறது.

இதைப் போக்குவதற்கு அரசு அவர்களுக்கு சுயதொழில் உள்ளிட்ட உதவிகளை செய்துகொடுக்க வேண்டும். நாட்டுக்குள் இவர்கள் நிம்மதியாக வாழ வழிசெய்து கொடுக்கவேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநெச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.

எஸ். ரகுதீஸ்

மருதங்கேணி பொதுச் சந்தைக் கட்டடத்தை உடன் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை


கட்டடவேலைகள் முடிவடைந்தும் சந்தை திறக்கப்படவில்லை

வடமராட்சி கிழக்கிலும் பச்சிலைப்பள்ளி கிழக்கெல்லைக் கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்குரிய ஒரேயொரு சந்தையான மருதங்கேணிச் சந்தைக்கான கட்டடவேலைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் திறக்கப்படாமல் உள்ளதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை எனத்தெரிவித்து தமது சந்தையைத் திறக்காமல் இருப்பது பொருத்தமில்லை என்றும் இம்மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். கடந்தகாலப் போர் நடவடிக்கைகள் காரணமாக மருதன்கேணி பொதுச்சந்தைக் கட்டடங்கள் அதனோடு இணைந்திருந்த கடைக் கட்டடத் தொகுதிகள் யாவும் முற்றாகச் சேதமடைந்திருந்தன. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இப் பொதுச் சந்தைக்கான கட்டடங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வேலைகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள நிலையிலும் பாவனைக்கு திறந்து விடாமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாகர்கோவில் தொடக்கம் கட்டைக்காடு @பாக்கறுப்பு (கேவில்) வரையான கிராம மக்களும் பச்சிலைப்பள்ளிப் பிரிவின் கிழக்கெல்லைக் கிராமங்களான மசார், சோறன்பற்று, முகாவில், இயக்கச்சி, சங்கத்தார்வயல், கோயில்வயல் கிராம மக்களும் மீன், கருவாடு மரக்கறி, தேன்ங்காய், கோழி, முட்டை போன்ற அன்றாடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை இச் சந்தையிலேயே  விற்பனை செய் ததுடன் கொள்வனவும் செய்து வந்தனர்.

வடமராட்சி பிரதேசத்திற்கான தேங்காயில் ஒரு பகுதி இச் சந்தையில் இருந்தே கடந்த காலங்களில் எடுத்துச்செ
-ல்லப்பட்டன. இச் சந்தை இயங்காமையினால் சிறிய அளவிலான மரக்கறி, தேங்காய்  வியாபாரங்கள் வீதியோ ரத்திலேயே நடைபெறுகின்றன. இதற்கு @மலதிகமாக தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தமக்குத்தேவையான வீட்டுப்பாவனைப் பொருட்களை வாங்குவதற்கும் 15, 30 கிலோ மீற்றர்கள் தூரத்திலுள்ள பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி சந்தைகளுக்@க மக்கள் செல்லவேண்டியுள்ளனர்.
எனவே, அப்பிரதேச மக்களின் நலன்கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருதன்கேணி பொதுச்சந்தையை பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டுமென இப் பிரதேசமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சீரற்ற காலநிலையால் சீரழிந்துள்ள வாழ்வாதாரம்


அடைமழை எனும் அரக்கன் நாட்டை ஆக்கிரமித்துள்ள காலமிது. வெந்த புண் மாறாத எம் மக்களுக்கு @வல்பா#ச்”வதா# அமைகிறது இந்த மழை. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த மழை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிர@தŒங்களிலும் அடித்துப் பெ#கிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று என வானிலை அவதான நிலையமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் @பாட்டி@பாட்டு மக்களை எச்Œரித்து வருகின்றன.

அண்மைக்காலமாக வன்னிப் பிர@தŒத்தில் நிலவிவந்த கடும் வரட்சியை அடுத்து, இப்@பாது ஆரம்பித்திருக்கும் இந்த மழை மக்களுக்கு ப”மையை கொடுப்பதிற்குப் பதில் அவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை இதுவரை பெ#துள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, மந்துவில், உடையார்கட்டு, ஆனந்தபுரம், உருத்திரபுரம், ”தந்திரபுரம், வி”வமடு, பிரமந்தனாறு இவையெல்லாம் இறுதி யுத்த காலத்தில் அ@நகம் அடிபட்ட பெயர்கள். யுத்தத்தின் @காரத் தாண்டவத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பிர@தŒங்கள் இவை. அ@நக உயிர்கள் பலியான பிர@தŒங்கள் இவை. அண்மையில் தான் இப் பகுதியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். இருந்த@பாதும் அடிப்படை வŒதிகள்கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் கொட்டில்களிலும், "ரென்டு' களிலும் வசித்துவந்த மக்களின் இன்றைய நிலையை öŒõல்லித்தெரிய@வண்டியதில்லை. இவர்கள் தஞ்Œமடைவதற்குக்கூட பாடŒõலைக@ளா ஏனைய இடங்க@ளாகூட இல்லை. ஏனெனில் பொது இடங்களுக்குக் கூட இ@தகதி தான்.

வன்னிப் பிர@தŒத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெ#து வருவதால் தொண்டு நிறுவனங்களால் அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிகக் கொட்டில்களின் கூரைகள் காற்றில் அள்ளிச் öŒல்லப்பட்டுள்ளன. மாங்குளம், முறிகண்டி, கிளிநொச்சி, கண்டாவளை, பரந்தன் @பான்ற இடங்களில் இவ்வாறான நிலைமைகளை கண்கூடாகக் காண முடியும்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் ”மார் 200 கி@லாமீற்றர் தொலைவில் அதிகளவு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டல திணைக்களம் எச்Œரித்துள்ளது. முல்லைத்தீவில் 4 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்டத்தின் அரŒõங்க அதிபர் குறிப்பிட்டிருந்தார். இறுதி யுத்தத்தின் இருப்பிடமான முள்ளிவா#க்கால் உள்ளிட்ட கரை@யாரப் பிர@தŒங்கள் இம் மாவட்டத்தி@ல@ய உள்ளடங்குகின்றன. யுத்தத்தின் வடுக்களை அதிகம் ”மந்துள்ள முல்லைத்தீவு மக்கள் மனதால் உறுதியானவர்கள். ஏனெனில் எந்த வŒதியும் ஏற்படுத்திக்கொடுக்காமல் மீளக்குடியமர்த்திய சில மாதங்களுக்குள்@ள@ய தமது தன்னம்பிக்கையாலும், தொழிலாற்றலாலும் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களின் உøழப்பில் மண் அள்ளிப்@பாடும்படியாக இம் மழை இப்@பாது வந்துள்ளது.

கடும் காற்றுக் காரணமாக கடற்கொந்தளிப்பு ஏற்பட வா#ப்புண்டு என எச்Œரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலில் இருந்து 500 மீற்றர் பகுதிக்குள் இருக்கும் மக்களை இடம்பெயரும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள முல்லைத்தீவு உள்ளிட்ட கரை@யாரப் பிர@தŒங்களைச் @Œர்ந்த இந்த மக்கள் பெரும்பாலா@னார் 500 மீற்றருக்கு உட்பட்ட பிர@தŒத்தி@ல@ய வாழ்ந்து வருகின்றார்கள். முல்லைத்தீவு,ஒட்டு”ட்டான் வீதி மழை வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதியினூடான @பாக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் ”ண்டிக்குளம், வடமராட்சி கிழக்கில் உள்ளடங்கும் வெற்றிலைக்@கணி, கட்டைக்காடு, முள்ளியான், ஆழியவளை, கொடுக்குளா#, உடுத்துறை, மருதங்@கணி, தாளையடி, öŒம்பியன்பற்று மற்றும் மாமுனை @பான்ற பிர@தŒ மக்கள் 2004 ஆம் ஆண்டு ”னாமித் தாக்கத்திற்குள்ளாகி ஆயிரக்கணக்கான உயிர்களையும் தொழில் உபகரணங்களையும் இழந்தனர். அதிலிருந்து மீண்டு ”முகமான வாழ்வுக்குத் திரும்பும் @வளையில் இறுதி யுத்தம் என்ற @பரவலம் ஏற்பட்டது. மீண்டும் @தடிவைத்த அனைத்தையும் இம் மக்கள் இழந்தனர்.

பல வருடங்களை முகாங்களில் களித்த இம் மக்களை மீண்டும் மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் அர” இவர்களை öŒõந்த இடங்களுக்கு அனுப்பிவைத்தது. அங்கு கையில் கிடைத்தவற்றைக்கொண்டு தம் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பிக்கொண்டிருந்த இவ்@வளையில், இவர்களை இந்த மழை @வதனைப்படுத்துகிறது.

இம் மழை மக்களை அதிகம் பாதித்துள்ளமைக்குக் காரணம் அவர்களிடம் மழையைத் தாங்கும் வகையில் வீடு இல்லாமை@ய ஆகும். வடக்குக் கிழக்கு மக்கள் தாமாக வீடுகளைக் கட்டுவதற்கான ‹ழல் இந்த நாட்டில் அமைய@வயில்லை. ஏனெனில் தமது öŒõந்த உழைப்பில் அவர்கள் கட்டிய வீடுகளும், கட்டிவந்த வீடுகளும் யுத்தம் ஏற்பட்ட காலங்களில் எறிகணைகளாலும், விமானத்தாக்குதல்களாலும் இடித்தழிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ”னாமிகூட இவர்களின் வீடுகளை விட்டுவைக்கவில்லை. தொண்டு நிறுவனங்களும் ஏனைய நாடுகளும் இவர்களின் நிலைமை கண்டு உதவ முன்வந்தன. ”னாமி வீட்டுத்திட்டம் என்னும் பெயரில் வீடுகள் கட்டுவதற்கான நிதியை வழங்கின. ஆனால் பலதரப்பாலும் அந்த பணம் கையாடப்பட்டு மக்களை வந்தடையாமல் @பாயின.

அ@த@பால் இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்திய அர” நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை @மற்கொண்டது. ஆனால் அதுவும் மந்தகதியி@ல@ய நடைபெற்று வருகின்றது. யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்காதது திட்டமிட்ட öŒய@லா? என எண்ணத் @தான்றுகிறது.

மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கி@லாமீற்றர் @வகத்தில் வீ”ம் காற்றால் வீதி@யாரங்களிலுள்ள மரங்கள் வீதிக்குக் குறுக்@க விழுந்திருப்பதால் வீதிப் @பாக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்கம்பங்களும் Œரிந்து விழுந்துள்ளன. இதனால் மின்Œõர இணைப்புகள் தொலைத்தொடர்பு இணைப்புகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கின்றன.

வவுனியாவைப் பொறுத்தவரை இங்கு தான் அதிகமான குளங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து பெ#துவரும் மழையால் குளங்கள் நிரம்பி உடைப்பெடுக்கும் அபாயம் நிலவுகின்றது. பள்ளப் பிர@தŒங்களில் நீர் @தங்கியிருப்பதால் விவŒõயச் öŒ#கை மற்றும் கால்நடை என்பவற்றிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலுக்கு மீனவர்கள் öŒல்ல@வண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அரŒ தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் ‹றாவளி தாக்கக்கூடும் என அறிவித்ததையடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி கிழக்கு மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொட்டும் மழையில் பாதுகாப்பான இடங்களை @நாக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

யாழில் தொடர்ந்து பெ#துவரும் மழை ஒரு மாணவனின் உயிரைக் காவுகொண்டுள்ளது. பருத்தித்துறை தம்பசிட்டி வட்டப்பாரி ஒழுங்கையில் மழைவெள்ளம் நிறைந்து காணப்பட்டுள்ளது. காற்றுடன் கூடிய மழையால் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் மின்Œõரக்கம்பி மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நிலைமை தெரியாத முஸ்தபா கலாகரன் என்ற 17 வயதுடைய, ஹாட்லிக் கல்லூரியில் கல்விகற்கும் மாணவன் øŒக்கிளில் ஒழுங்கையூடாக வர முற்பட்ட@பாது மின்Œõரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.

பல துன்பங்களைத் தாண்டி யாழ். மக்கள் ஒரு அமைதியான ‹ழலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் @வளையில் இயற்கை அனர்த்தங்களும் அவர்களை இன்னல்ப்படுத்த முயல்கின்றன. இவ் இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களிலிருந்து மக்களைக் காப்பற்ற அர” உரிய நடவடிக்கைகளை எடுக்க@வண்டும்.

எஸ்.ரகுதீஸ்
  
(படங்கள்றொக்ஷன்)

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவல வாழ்வு

நாகர்கோவில் , கட்டைக்காடு, தாளையடி, வெற்றிலைக்கேணி , உடுத்துறை ,ஆழியவளை மக்கள் கவலை 

Add caption
வடபகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுவரும் அதேவேளை, மீள்குடியமர்ந்த மக்கள் தமக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென புகார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் கொட்டகைகளிலும் வசதியற்ற சிறு குடிசைகளி லுமே வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அண்மையில் மீளக் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் சிறு கொட்டகைகளிலும் வசதிகளற்ற குடிசைகளிலும் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை 
மேம்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வப்போது தம்மை பார்வையிட வரும் அதிகாரிகள் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவிக்கின்றபோதிலும் அவை நிறைவேற்றப்படுவதில்லை எனவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். 

யுத்த சூழ்நிலையின் போது எவ்வாறு தமது வாழ்க்கை அமைந்திருந்ததோ அதேபோன்று தற்போதும் இருப்பதாக கூறும் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

யுத்தத்தாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்க ப்பட்ட மக்கள் பல வருடங்களுக்குப்பின் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் சிறு சிறு கொட்டகைகள் அமைத்து தமது வாழ்வாதாரத்தை மேம் படுத்த முடியாமல் தினம் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொள்கின்றனர்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளான நாகர்கோவில் , கட்டைக்காடு, தாளையடி, வெற்றிலைக்கேணி , ஆழியவளை ஆகிய பிரதேச மக்கள் இவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்கள் தற்போது போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், கல்விச் செயற்பாடு, மின்சாரம் இன்மை போன்ற முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இம் மக்களின் அவல நிலையைப் போக்கி உதவ முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

12 வது இறுதிப்போட்டி.....


12 வது இறுதிப்போட்டி உடுத்துறை பாரதி அணியினருக்கும் நாகர்கோவில் வெண்மதி அணியினருக்கும் இடம்பெற்றது. இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று உடுத்துறை பாரதிஅணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். முதலில் உடுத்துறை பாரதி அணி அணி 9.5  பந்துப்பரிமாற்றங்களின் முடிவில்  அனைத்துவிக்கெட்டினையும் இழந்து 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. . இதில் உடுத்துறை பாரதி அணிசார்பாக ஜெயதீப் 12 பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களைப் பெற்றார். நாகர்கோவில் வெண்மதிஅணி சார்பாக பந்துவீச்சில்   கோகுலதாசன் 3  ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை கொடுத்து 3  விக்கெட்டை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாகர்கோவில் வெண்மதி அணி 6.3 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 3 விக்கெட்டைமாத்திரம் இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெடட்டுகளால் வெற்றிபெற்றது.  அருணோதயா வி.கழகத்தால் முதல் முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் விளையாடடுப்போட்டியின் மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த முதலாவது அணி என்கிற பெருமையை நாகர்கோவில் வெண்மதி வி.கழக அணி பெற்று சாதனை படைத்தது.

http://aliyawalai.blogspot.com/
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger