காதலர் தினத்துக்கு சேலை வாங்கி தராததால் தீக்குளித்த இளம் பெண்!


காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகினார்!
காதலர் தினத்துக்கு கணவர் சேலை வாங்கித் தராததால், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகினார்.
திருவொற்றியூர் ராஜாஜி நகர் கம்பர் தெருவில் வசித்து வருபவர் பிரேம்குமார்(வயது 28). பழைய பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி(23). இவர்களுக்கு விக்கி(4), தீபக்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். 
பிரேம்குமார், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், சென்னை வியாசர்பாடியில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு கடை வைத்திருந்தார். அப்போது கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவியுடன் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, டெல்லியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 
பின்னர் சிறிது காலம் கழித்து திருவொற்றியூர், ராஜாஜி நகரில் குடியேறினர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி அன்று காதலர் தினத்தில் புத்தாடை அணிந்து பண்டிகை போன்று வெகு விமரிசையாக கொண்டாடி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் மனைவி தேவிக்கு பிரேம்குமார் புடவை எடுத்து கொடுத்தார்.
ஆனால் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிரேம்குமார், தனது மனைவி தேவிக்கு புடவை எடுத்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தேவி, நேற்று முன்தினம் இரவு சமையல் செய்யாமல் இருந்தார். இரவு வீட்டிற்கு வந்த பிரேம்குமார் மனைவியிடம், Òஏன் சமையல் செய்யவில்லை? என்று கேட்டு விட்டு வீட்டிற்குள் சென்று தூங்கி விட்டார்.
இதனால் மேலும் மனமுடைந்த தேவி, திடீரென சமையல் அறைக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறித் துடித்த மனைவியை காப்பாற்ற முயன்ற பிரேம்குமார் மீதும் தீப்பற்றிக்கொண்டது. தீயில் கருகிய இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவி, பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

யாழ். பல்கலை மாணவர்கள் இன்று விடுதலை


பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்களக மாணவர்கள் இருவரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ரஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் அச்சந்தர்ப்பத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்களக மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த உருக்கமான வேண்டுகோளிற்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.
மாணவர்கள் எதிர்காலத்தில் கற்றல் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடவேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் கமேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘‘விந்து தானம்” பற்றிய ஒரு சிறப்பான திரைப்படம்


‘‘விக்கி டொனர்” - விந்து தானம் பற்றிய (ஹிந்தி) படம்.
(பலநாட்களாக நினைத்து சமீபத்தில் பார்த்த படம் இது)

விந்து தானம் பற்றிய படம் என்றவுடன் இதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்து வந்தது.

படத்தோட  கரு வித்தியாசமாக இருந்தாலும். முகசுளிக்கும் வகையில் இல்லாமல் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்  வகையில் நகைச்சுலவ கலந்து படத்தை இயக்கியிலுக்கிறார்கள்.

இதுதான் படத்தின் கதை-

டில்லியில் ‘‘குழந்தைப்பேறு இல்லாதோருக்கு தரமான விந்து தருவித்து கரு உருவாக்கம் செய்வோம்” எனும் தாரக மந்திரசொல்லுடன் விந்து வங்கியுடன் கூடிய மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் ஒருவர். தரமான விந்தணு வேண்டி மருத்துவரை சந்திக்க வரும் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு தனக்கு பிறக்கும் குழந்தை ஐஸ்வர்யா ராயாகவும்,சாருக்கான் போன்றும், சச்சின் டெண்டுல்கர் போன்றும் தகுதி படைத்தவர்களாக இருக்கவேண்டுமென்பது.


மருத்துவரும் இந்த சகல திறைமைகளும், அழகும் கூடிய ஓர் இளைஞனை வெகுநாளாக தேடிவர எதேச்சையாக ஹீரோ விக்கி (Ayushmann Khurrana) ( இவருக்கு இது முதல் படம். ஏற்கவே ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளர்) அவர் கண்ணில் சிக்குகிறார். அவரை வெகுநாட்களாக பின்தொடரும் மருத்துவர் ஒருக்கட்டதில் தான் பின்தொடரும் நோக்கத்தை சொல்லி விந்து தானம் செய்ய சொல்லி நாயகனை வற்ப்புறுத்த முதலில் தயங்கும் நாயகன் (அப்பா இல்லாமல் விதவை தாயுடன் வளரும் மகன்) குடும்பசூழல் காரணமாக பின் சம்மதம் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
மருத்துவர் எதிர்ப்பார்க்கும் தரமான விந்து நாயகனிடம் கிடைக்கவே மருத்துவருக்கும் வாடிக்கையாளர் பெருகுகிறார்கள்.நாயகனுக்கும் பணம் கொட்டுகிறது .நாயகனின் வாழ்க்கைதரம் உயருகிறது


இந்நிலையில் வங்கியில் பணிபுரியும் பெங்காலிப் பெண்ணான ஆஷிமா  (Ayushmann Khurrana) நாயகியை (இவர் தமிழில் கௌரவம், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்) நாயகன் காதலிக்கிறான்.அவள் ஏற்கனவே திருமணமாகி  விவாகரத்து ஆன  பெண். இருந்தாலும் விடாமல் தான் எக்ஸ்போர்ட் ,இம்போர்ட் ,ஷேர் பிசினெஸ் செய்வதாக கூறி அவளை பல போராட்டங்களுக்கு மத்தியில் திருமணம் செய்கிறான்.


இந்நிலையில் அவள் கர்ப்பப்பை வலுவிழந்து இருப்பதாகவும் , அவளால் குழந்தை பெற இயலாது எனவும் சோதனையில் தெரியவருகிறது. இதனால் மனமுடைந்து இருக்கும் நாயகிக்கு மேலும் சோதனையாக தன கணவன் விந்து தானம் செய்பவன் என்கிற உண்மை ஒரு சம்பவத்தால்  தெரியவர மேலும் மனமுடைந்து தன்  தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.
இந்நிலையில் கதாநாயகன் வருத்தமுற்று அலைகிறான். தன்னால் அவன் குடும்பம் பாதிக்கப்பட்டு மனைவி பிரிந்ததை அறிந்த மருத்துவர் தானே ஏதேனும் செய்து அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்.நாயகன் நாயகி சேர்ந்தார்களா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான்  படத்தின் முடிவு.

மிகவும் வித்தியாசமான களத்தை எடுத்துக்கொண்டு விரசம், ஆபாசம் இல்லாமல் நகச்சுவையுடன் கதையை நகர்த்தி  இருப்பது இயக்குனரின் வெற்றி..
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். மருத்துவர் பிச்சு உதறி இருக்கிறார்.நடிகர் ஜான் ஆப்ரகாம் தயாரித்து வெற்றி கண்டிருக்கிறார்.இப்போது இந்த படத்தின் தமிழ் ,தெலுங்கு உரிமையை நம்ம நடிகர் சித்தார்த் வாங்கி இருப்பது கூடுதல் செய்தி. விரைவில் இந்தப்படத்தை தமிழிலும்  எதிர்ப்பார்க்கலாம்..

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger