ஆடுகளம் புகழ் ஜெயபாலன் இலங்கையில் கைது!

தனுஷின் ஆடுகளம் படத்தில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் ... ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு வணக்கம் செலுத்த சென்றிருந்தவேளையில் அவர் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த அவர்  விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பாம்பு

நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள்ளிருந்து பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்கவின் அறையிலுள்ள பூச்சாடியொன்றின் கீழிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது விரியன் பாம்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அறையிலுள்ள தொலைபேசியை இன்று நண்பகல் 12 மணியளவில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியரே இந்த பாம்பைக் கண்டதாகவும் அது பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger