விண்ணில் கலந்த இசை...



டி.எம்.எஸ். என்பதில் உள்ளடிஎன்பது அவரின் குடும்பப் பெயர்தொகுளுவா’, ‘எம்என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: ‘எஸ்என்றால், சௌந்தரராஜன். தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.

அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்கள் என்றால் டி.எம்.எஸ் இல்லாத பாட்டுக்களே இல்லை எனலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ்.. சொல்லப்போனால், இருவருக்கும் பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்! ‘நவராத்திரிபடத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

பாகப் பிரிவினைபடத்தின் 100வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில்கடவுள் வாழ்த்துபாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

பட்டினத்தார், ‘அருணகிரிநாதர்என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்! ‘நீராரும் கடலுடுத்த..’ தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜன கண மனஎன்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்.ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது! .ஆர்.ரஹ்மான் இசையில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடலையும் மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார்.தனது கம்பீரக்குரலால் இசை ரசிகர்களை கட்டிப்போட வைக்கும் வசியக்குரலுக்கு சொந்தக்காரரான டி.எம்.சௌந்தர்ராஜன் (1922 - 2013) இன்று நம்மிடையே இல்லை என்பது மறக்க முடியாத சோகம்! மண்ணுலகம் கேட்டு ரசித்த அந்த இசை கானத்தை இனி, விண்ணுலகமும் கேட்கட்டும்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்கு தீக்குளிப்பு: கண்டியில் சம்பவம்



கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார்.


குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர் - மன்னார் ஆயர்


பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்  தெரிவித்துள்ளார்.

முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி, அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன்.
ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண் பழி சுமத்துகின்றது.
 பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது.இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது.

எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது, கலாசாரத்தைக் கொண்டது. எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது.
எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்க வேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இலங்கை இராணுவப் புலனாய்வாளன்



வன்னியில் சம்பவம்


முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் பகுதியில் உடையார்கட்டு மகாவித்தியாலயத்திற்கு உயர்தரம் கற்பதற்காய் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளரால் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி வழமையாக பாடசாலை செல்வது போன்று கடந்த  திங்கள்  தனது துவிச்சக்கரவண்டியில் பயணத்தை ஆரம்பித்து சென்று கொண்டிருக்கையில் 7.00 மணியளவில் முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் அடர்ந்த காட்டுப் பகுதியல் தனிமையில் சென்ற மாணவியை சிவப்பு நிற உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் தள்ளி விட்டு அடர்ந்த காட்டுக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கையில் மாணவி கூச்சலிட்டதால் பிரதேச வாசிகளால் காப்பாற்றப்பட்டார்.
இவ் நாசகார வேலையில் ஈடுபட்ட இராணுவப் புலனாய்வாளரை இனம் கண்ட பிரதேச வாசிகள் பெற்றாரின் உதவியுடன் பொலிசில் முறைப்பாடு செய்தனர்.

இதனால் குறித்த நபரை பொலிஸில் ஒப்படைக்க தாம் நடவடிக்கை எடுக்கின்றோம் என மக்கள் தெரிவித்த வேளை குறுக்கிட்ட இராணுவத்தினர் தாம் விசாரிப்பதாகக் கூறியதுடன் குறித்த நபரையும் மாணவியின் பெற்றோரையும், அவரைத் தாக்கிய நபரையும் மட்டும் படைமுகாமுக்குள் அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எச்சரித்துள்ளனர்.
இதனால் பயம்கொண்ட பெற்றோரும் ஏனையோரும் மேலதிக நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

இதேவேளை பாடசாலை ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஊர் மக்கள் ஆலோசித்தபோது பாடசாலை அதிபர் ஸ்ரீதரன் அதனை மறுத்துள்ளதாகவும், அப்பிரதேச ஆர்.டி.எஸ் அமைப்பும் இராணுவத்திற்கு சார்பான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும் பாடசாலை அதிபர் இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர் ராஜ்குமார் என்பவருடன் தொடர்புகொண்டதை தொடர்ந்து முல்லைத்தீவு படைமுகாமின் பொறுப்பதிகாரி மார்க் என்பவருடன் தொடர்புகொண்ட கல்விப்பணிப்பாளர் இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றவேளை அவ் அதிகாரி விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் தேராவில் தேக்கங்காட்டில் அமைந்துள்ள இராணுவத்தினருக்கு அறிவித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேக்கங்காட்டு படைமுகாமிலிருந்து இராணுவத்தினர் விசாரணைக்கு வந்தபோதிலும் ஏற்கணவே இராணுவத்தினால் பயமுறுத்தப்பட்ட பெற்றோரும் மக்களும் சாட்சியத்தை வழங்க தயங்கியுள்ளனர்.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களை தொடர்பு கொண்ட குறித்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்ததுடன் அது சம்மந்தமாக சரியான அறிவித்தல்கள் தந்தால் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், ஆர்.டி.எஸ் தலைவர் ஆகியோர் இராணுவத்திற்கு சார்பான செயற்பாட்டாளர்கள் ஆகையில் இச்சம்பவம் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்க முடியாது அப்பிரதேச மக்கள் திண்டாடுவதோடு, பல இன்னல்களுக்கு மத்தியிலும் தன்மானத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தை சிங்களவர்களுக்கு விற்க நினைக்கும் இவர்கள் பற்றியும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger