Home » » மருதங்கேணி பொதுச் சந்தைக் கட்டடத்தை உடன் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

மருதங்கேணி பொதுச் சந்தைக் கட்டடத்தை உடன் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை


கட்டடவேலைகள் முடிவடைந்தும் சந்தை திறக்கப்படவில்லை

வடமராட்சி கிழக்கிலும் பச்சிலைப்பள்ளி கிழக்கெல்லைக் கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்குரிய ஒரேயொரு சந்தையான மருதங்கேணிச் சந்தைக்கான கட்டடவேலைகள் முடிவடைந்துள்ள நிலையிலும் திறக்கப்படாமல் உள்ளதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை எனத்தெரிவித்து தமது சந்தையைத் திறக்காமல் இருப்பது பொருத்தமில்லை என்றும் இம்மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். கடந்தகாலப் போர் நடவடிக்கைகள் காரணமாக மருதன்கேணி பொதுச்சந்தைக் கட்டடங்கள் அதனோடு இணைந்திருந்த கடைக் கட்டடத் தொகுதிகள் யாவும் முற்றாகச் சேதமடைந்திருந்தன. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இப் பொதுச் சந்தைக்கான கட்டடங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வேலைகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள நிலையிலும் பாவனைக்கு திறந்து விடாமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாகர்கோவில் தொடக்கம் கட்டைக்காடு @பாக்கறுப்பு (கேவில்) வரையான கிராம மக்களும் பச்சிலைப்பள்ளிப் பிரிவின் கிழக்கெல்லைக் கிராமங்களான மசார், சோறன்பற்று, முகாவில், இயக்கச்சி, சங்கத்தார்வயல், கோயில்வயல் கிராம மக்களும் மீன், கருவாடு மரக்கறி, தேன்ங்காய், கோழி, முட்டை போன்ற அன்றாடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை இச் சந்தையிலேயே  விற்பனை செய் ததுடன் கொள்வனவும் செய்து வந்தனர்.

வடமராட்சி பிரதேசத்திற்கான தேங்காயில் ஒரு பகுதி இச் சந்தையில் இருந்தே கடந்த காலங்களில் எடுத்துச்செ
-ல்லப்பட்டன. இச் சந்தை இயங்காமையினால் சிறிய அளவிலான மரக்கறி, தேங்காய்  வியாபாரங்கள் வீதியோ ரத்திலேயே நடைபெறுகின்றன. இதற்கு @மலதிகமாக தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தமக்குத்தேவையான வீட்டுப்பாவனைப் பொருட்களை வாங்குவதற்கும் 15, 30 கிலோ மீற்றர்கள் தூரத்திலுள்ள பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி சந்தைகளுக்@க மக்கள் செல்லவேண்டியுள்ளனர்.
எனவே, அப்பிரதேச மக்களின் நலன்கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருதன்கேணி பொதுச்சந்தையை பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டுமென இப் பிரதேசமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger