விசர் நாய்க்கடிக்கு இலக்கானவர் மரணம்


முல்லைத்தீவில் விசர் நாய் கடிக்கு இலக்கான ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை மரணமானார்.

கன்னங்குடா காயான் மடு கிராமத்தைச் சேர்ந்த கே.சுபாஷ் (வயது 29) என்பவரே மரணமானவராவார்.

முல்லைத்தீவுக்கு கூலி வேலைக்குச் சென்ற வேளையில் இவர் விசர் நாய் கடிக்கு இலக்காகியுள்ளார். அதன் பின்னர் அந்த நாய் இறந்துள்ளது.

எனினும் மட்டக்களப்பு திரும்பிய இவர் சிகிச்சை எதனையும் பெறவில்லை நோய் அதிகரித்த நிலையில் அவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

மரண விசாரணையின் பின் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
___

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger