அஜித்தின் படத்தை வைத்திருந்த தங்கையை கண்டித்த அண்ணன்!:ஆத்திரத்தில் தீக்குளித்து யுவதி தற்கொலை !

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் தென்னிந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருந்த யுவதி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு சென்றிருந்த அண்ணன், யுவதியின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் படங்களை கண்டு, யுவதியை கண்டித்துள்ளார்.

இதனால் யுவதி தனக்கு தானே தீயிட்டு கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடலில் தீ பரவியதன் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யுவதி அமர்ந்து பாடம் கற்கும் மேசை மீது அஜித் படங்கள் இருந்தால், ஏன் அவற்றை வைத்திருக்கின்றாய் என யுவதியை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவதி தனது உடலில் மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger