ஆடுகளம் புகழ் ஜெயபாலன் இலங்கையில் கைது!

தனுஷின் ஆடுகளம் படத்தில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் ... ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு வணக்கம் செலுத்த சென்றிருந்தவேளையில் அவர் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த அவர்  விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பாம்பு

நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள்ளிருந்து பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்கவின் அறையிலுள்ள பூச்சாடியொன்றின் கீழிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது விரியன் பாம்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த அறையிலுள்ள தொலைபேசியை இன்று நண்பகல் 12 மணியளவில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியரே இந்த பாம்பைக் கண்டதாகவும் அது பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போனோர் ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாது சென்ற நவீபிள்ளை!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்  இந்த சந்திப்பு இன்றுக்காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையிலும் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில்,  காணாமல் போனோரின் சங்கத்தினர் தங்களுடைய உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு வாசிகசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த காணாமல் போனோர் சங்கத்தினரும் பங்கேற்றனர். இதில் தமிழ்,சிங்கள் மற்றும் முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், தமிழ்த்தேசிய முன்னணியின் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
பொது நூலகத்தில்   இடம்பெற்ற சந்திப்பிற்காக முன்வழியாக வருகைதந்த ஆணையாளர் நவனீதம்பிள்ளை சந்திப்புகளை முடித்துக்கொண்டு பொது நூலகத்தின் பின்வழியாக சென்றுவிட்டார் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அஜித்தின் படத்தை வைத்திருந்த தங்கையை கண்டித்த அண்ணன்!:ஆத்திரத்தில் தீக்குளித்து யுவதி தற்கொலை !

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் தென்னிந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருந்த யுவதி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு சென்றிருந்த அண்ணன், யுவதியின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் படங்களை கண்டு, யுவதியை கண்டித்துள்ளார்.

இதனால் யுவதி தனக்கு தானே தீயிட்டு கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடலில் தீ பரவியதன் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யுவதி அமர்ந்து பாடம் கற்கும் மேசை மீது அஜித் படங்கள் இருந்தால், ஏன் அவற்றை வைத்திருக்கின்றாய் என யுவதியை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவதி தனது உடலில் மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

திரையுலகின் மார்க்கண்டேயர் கவிஞர் வாலி

தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் கவிஞர் வாலி பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண் ணன் என்று வர்ணிக்கப்படுகின்றார். திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். இவரது குடும்பம் ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார்  பொன்னம்மாளின் தம்பதிகளுக்கு மகனாக 29 ஆம் திகதி ஒக்டோபர், 1931 ஆம்ஆண்டு பிறந்தார். டி.எஸ்.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட  வாலி படித்தது அந்தக்காலத்து எஸ்.எஸ்.எல்.சி. பின்னர், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் கல்வி கற்றார்.
தன் நண்பர்களின் துணையுடன்நேதாஜிஎன்னும் கையெழுத்துப் பத்திரிகையைத் ஆரம்பித்தார். அதன் முதல் பிரதியை எழுத்தாளர் கல்கியின் கையால் வெளியிட வைத்தார். அந்த விழாவிற்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி   வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகை மிகவும் பிரபலம் இடைந்தது.  பல இளைஞர்கள் அந்தப் பத்திரிகையில் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் பிரபல்யமானவை. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அத்துடன் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தமிழ் மொழியில் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. சிறப்பாக படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

கவிஞர் வாலி ரமணத்திலகம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோர்.  ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். மனைவியின் மறைவு வாலியை பெரும் துயரில் ஆழ்த்தி அவரை நோய்வாய்ப்பட வைத்தது. வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே தபால் அட்டையில் டி.எம்.எஸ் சௌந்தரராஜனுக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலைஎன்றாலும் கந்தனே உனை மறவேன் பாடல். இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!. 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்,வாலி  அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டியக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி போன்றன குறிப்பிடத் தக்கவை. இயக்குனர் மாருதிராவோடு  இணைந்து ‘வடை மாலை’ என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகிய  இருவருக்கும் கவிஞர் வாலி மிகவும் பிடித்தமானவர். எம்.ஜி.ஆர். வாலியை `என்ன ஆண்டவனே என்று தான் அழைப்பாராம். சிவாஜி கணேசன்`என்ன வாத்தியாரே’! என்றுதான் அழைப்பாராம்.
பல விருதுகளைப் பெற்ற வாலி, 2007 ஆம் ஆண்டு பத்மசிறி விருதினைப் பெபற்றுக் கொண்டார்.  அத்துடன் பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது, ஐந்து மாநில அரசின் விருதுகள் எனவும்  பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ்மாநாடு போன்றவற்றின் இவரது பங்கு அளப்பரியது. கண்ணதாசன் இறந்தபோது ‘எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’  என்ற கண்ணீர் வரிகளை வாலி எழுதினார். எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்தச் சந்தர்ப்பத்திலம் கவிஞர் வாலி வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. கடவுச்சீட்டே  இல்லாத பாட்டுக்காரர் இவர் என்று பலராலும் வியந்து புகழப்பட்டவர்.இலங்கைத் தமிழர்களின் மீது அதீத பற்றுக் கொண்ட கவிஞர் வாலி இறுதி யுத்தத்தின் போது  ‘இருக்கிறானா? இல்லையா? என்ற தலைப்பில் கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து  அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.
யார் மனதும் நோகும்படி ஒரு சொல்லைக் கூடப் பிரயோகிக்காத ஒரு கவிஞர். கவிமாமுனி, வாலிபக் கவி, காவியக் கவி என்றெல்லாம் இந்த திரையுலகம் ஆயிரம் அடைமொழி சூட்டி அழைத்தாலும், தனக்குப் பிடித்த ஒரே அடைமொழிகவிஞர்தான்  என்று அடிக்கடி கூறுவார் வாலி . முதல்வர் ஜெயலலிதாவை ரங்கநாயகி என்று புகழ்ந்தாலும், கலைஞரே என் உற்ற நண்பர் என எந்த மேடையிலும் தயங்காமல் சொல்லும் தைரியசாலி. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் வரிசையில் திரையிலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் செழுமைப்படுத்திய உழவன், இந்த தமிழ்க் கிழவன்!
 “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ” என்று உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் பாடல் எழுதிய வாலி, கடந்த மாதம் வெளியாகிய தில்லுமுல்லு திரைப்படத்தில் “கைபேசி எண் கூட சொல்லாமலே கைவீசி சென்றாளே நில்லாமலே” என்ற பாடலை எழுதினார். இந்த இரண்டு பாடலிலும் அவரின் இந்த இளைமைத் துடிப்பு சற்று குறைந்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே அவர் தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயக் கவிஞர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இதை உறுதிப்படுத்தும் விதமாக கவிஞர் வாலி அண்மையில் வெளியான எதிர் நீச்சல் திரைப்படத்தில் அவர்  எழுதிய “வெளிச்சப் பூவே” என்ற பாடல் இளசுகளின் தேசிய கீதமாக ஒலிக்கின்றது.தள்ளாத வயதிலும் காதல் ரசம் ததும்பும் சினிமாப் பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதைக் துள்ளாட்டம் போடவைத்த கவிஞர் வாலி இன்று மரணப்படுக்கையில் இருப்பது சினிமா ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் பேசும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நுரையீரலில் தொற்றும் சளி படலமும் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை  மோசம் அடைந்துள்ளது. தொடர்ந்தும் அவர் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
 

24 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த மைக்கல் ஜக்ஸன்


பொப்­பிசை சக்­க­ர­வர்த்தி என வர்­ணிக்­கப்­படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்­த­ பட்சம் 24 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இவ்­வி­ட­யத்தை அவர்கள் வெளியே சொல்­லாமல் இருப்­ப­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செல­விட்­ட­தா­கவும் அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்­தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம் ஆண்டு அவர் புகழின் உச்­சியில் இருந்த காலத்­தி­லேயே சிறுவர் பாலி யல் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.
1993 ஆம் ஆண்டு 13 வய­தான ஜோர்டன் சான்ட்லர் எனும் தனது மகனை மைக்கல் ஜக்ஸன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக ஈவான்ட் சாண்ட்லர் என்­பவர் குற்றம் சுமத்­தினார். பின்னர் அவ­ருக்கு பணம் வழங்கி, இவ்­வி­வ­கா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்தார் ஜக்ஸன். பின்னர் கெவின் ஏர்­விஸோ எனும் சிறு­வனை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக 2005 ஆம் ஆண்டு ஜக்ஸன் மீது வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. அவ்­வ­ழக்­கி­லி­ருந்து மைக்கல் ஜக்ஸன் விடு­த­லை­யானார்.
நெவர்லேண்ட் என பெய­ரி­டப்­பட்ட தனது பிர­மாண்ட இல்­லத்­துக்கு அழைக்­கப்­பட்ட எந்த சிறு­வனும் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­ட­வில்லை என மைக்கல் ஜக்ஸன் வலி­யு­றுத்­தினார்.
எனினும், 15 வரு­ட­கா­லத்தில் குறைந்­த­பட்சம் 24 சிறு­வர்­களை அவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர்­க­ளையும் அவர்­களின் குடும்­பத்­தி­ன­ரையும் மௌன­மாக்­கு­வ­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை செல­விட்­டுள்­ளமை அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­பான எவ்.பி.ஐ.யின் இர­க­சிய ஆவ­ணங்கள் மூலம் தெரிய வந்­துள்­ள­தாக பிரித்­தா­னிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது.
எவ்.பி.ஐ.யின் மேற்­படி ஆவ­ணங்­க­ளுக்கு CADCE MJ -02463 மற்றும் CR 01046 என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும், 2005 ஆம் ஆண்டு மைக்கல் ஜக்­ஸ­னுக்கு எதி­ரான வழக்கு நடை­பெற்­ற­போது வழக்குத் தொடு­நர்­க­ளுக்கு அந்த ஆவ­ணங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.
ஒரு தடவை பிர­ப­ல­மான குழந்தை நட்­சத்­திரம் ஒரு­வரின் அங்­கங்­களை மைக்கல் தொடு­வ­தையும், மற்­றொரு சிறு­வனை துஷ்­பி­ர­யோ­கம்­செய்­து­கொண்டு அவர் ஆபாசப் படங்­களை பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­தையும் மற்­ற­வர்கள் கண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இன்­னொரு சிறு­வனை அவர் துஷ்­பி­ர­யோகம் செய்­யும்­போது அச்­சி­று­வனின் தாய் நடப்­பது எதையும் அறி­யாமல் சில வரி­சை­க­ளுக்கு அப்பால் அமர்ந்து படம் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தாராம்.
மேற்­படி ஆவ­ணங்கள் 1989 ஆம் ஆண்­ட­ளவில் தனியார் புல­னாய்­வா­ள­ரான அந்­தனி பெலி­கனோ என்­ப­வரால் தொகுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தன்னைப் பற்­றிய தக­வல்கள் வெளி­வ­ராமல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக மைக்கல் ஜக்­ஸனால் பணிக்கு அமர்த்­தப்­பட்­ட­வர்தான் அந்­தனி பெலி­கனோ.
மைக்கல் ஜக்­ஸ­னுடன் தொடர்­பில்­லாத வேறொரு வழக்கில் கப்பம் வசூ­லித்தல், தொலை­பேசி உரை­யா­டல்­களை பதி­வு­செய்தல் போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக 15 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதிக்கப்­பட்டு தற்­போது சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார் அந்­தனி பெலி­கனோ.
அவரின் முன்னாள் உத­வி­யாளர் ஒரு­வர்தான் மேற்­படி இர­க­சிய ஆவ­ணங்கள் குறித்த தக­வலை த சண்டே பீப்பள் எனும் பிரித்­தா­னிய பத்­தி­ரி­கை­யிடம் தெரி­வித்­துள்ளார்.
மைக்கல் ஜக்ஸன் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் சிறு­வர்­களில் 17 பேரை அந்­தனி பெலி­கனோ அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார். அவர்­களில் திரைப்­பட, தொலைக்­காட்சி குழந்தை நட்­சத்­தி­ரங்கள் ஐவர், நடனக் கலை­ஞர்கள் இருவர் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர். ஏனைய சிறு­வர்­களில் ஐரோப்­பாவை சேர்ந்த சிறு­வ­னொ­ருவன், திரைக்­கதை எழுத்­தாளர் ஒரு­வரின் மகன்கள் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர்.
துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்த தக­வல்­களை கசிய விடாமல் இருப்­ப­தற்­காக குறைந்­த­பட்சம் 3 சிறு­வர்­களின் குடும்­பத்­தி­ன­ரு
மற்­றொரு பிர­ப­ல­மான குழந்தை நட்­சத்­திரம் ஒரு­வரின் குடும்­பத்­தினர் ஊட­கங்கள், நூல் வெளி­யீட்­டா­ளர்­க­ளுடன் தொடர்பு கொள்­வதற்கு 6 இலட்சம் அமெ­ரிக்க டொலர்கள் வழங்­கப்­பட்­டதாம். தனது இளம் வயதில் தன்னை மைக்கல் ஜக்ஸன் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக அவுஸ்­தி­ரே­லிய நடனக் கலைஞர் வாட் ரொப்ஸன் அண்­மையில் வழக்குத் தொடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வ­ழக்கு தொடுக்­கப்­பட்ட சில நாட்­க­ளின்பின் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தை மறைப்­ப­தற்கு மைக்கல் ஜக்ஸன் பணம் வழங்­கி­யமை குறித்து தகவல் வெளி­யா­னது.தற்­போது 30 வய­தான வாட் ரொப்ஸன், தனது 7 வயது முதல் 14 வய­து­வரை மைக்கல் ஜக்­ஸனால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். ஆனால், பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற மைக்கல் ஜக்­ஸ­னுக்கு எதி­ரான வழக்கில் மைக்கல் ஜக்­ஸ­னுக்கு ஆத­ர­வாக சாட்­சி­ய­ம­ளித்­தவர் வாட் ரொப்ஸன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
மைக்கல் ஜக்ஸன் மர­ணத்தின் பின்­னரும் அவர் தொடர்பான சர்ச்சைகள் குறைந்துவிடவில்லை. மைக்கல் ஜக்ஸனின் மரணத்துக்கு 400 கோடி டொலர் (சுமார் 50,000 கோடி ரூபா) நஷ்ட ஈடு கோரி ஏ.ஈ.ஜி எனும் நிறுவனத்துக்கு எதிராக ஜக்ஸனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
அதேவேளை, மைக்கல் ஜக்ஸன் குறித்தும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவரின் 3 பிள்ளைகளில் மூத்தவர்கள் இருவரும் வேறு நபரின் உயிரணுக்கள் மூலம் பிறந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளை அவரின் 15 வயது மகளான பரிஸ் ஜக்ஸன், அண்மையில் தற்கொலைக்கு முயன்றமை குறிப்பிடத்தக்கது.

க்கு மைக்கல் ஜக்ஸன் பணம் வழங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மைக்கல் ஜக்­ஸ­னுடன் நட்­பாக இருந்த 13 வய­தான பாட­க­ரான ஜோர்டன் சான்ட்­ல­ருக்கு வழங்­கப்­பட்ட 2 கோடி டொலர் டொலர்­களும் மேற்­படி 3.5 கோடி டொலர் தொகையில் அடங்கும்.

கஜினி இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜியா கான் தற்கொலை


.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இந்திப் பதிப்பில் நடித்த இந்தி நடிகை ஜியா கான் தற்கொலை செய்துள்ளார்.

தமிழில் வெளியாகிய கஜனி படத்தில் நயன்தாரா நடித்த பாத்திரத்தில்இந்தியில் இவர் நடித்திருந்தார். திழில்போல் இல்லாம்ல இந்தியில் இவருக்கு அசினுக்கு இணையாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அமிதாப் பச்சன் நடித்த நிஷாபத், அக் ஷய் குமாருடன் ஹவுஸ் ஃபுல் போன்ற இந்தி படங்களில்  நடிகை ஜியா கான் நடித்திருந்தார்.. 

நஃபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் இவர் தோன்றியுள்ளார். 

மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதாக இன்று அதிகாலை தகவல் வெளியாகியுள்ளது. 

எப்படி தற்கொலை செய்துக்கொண்டார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தெளிவான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger