Home » » அரசியல் சண்டித்தனம்

அரசியல் சண்டித்தனம்

அண்மையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்த சம்பவம் அரச ஊழியர்கள் மத்தியில் ஓர் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இவ்வாறு நடந்துகொண்டது நாட்டிலுள்ள அரச ஊழி யர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் செயலாகும் எனக் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அரசியல்வாதி என்றால் எதுவாக இருந்தாலும் செய்ய முடியுமா? ஒருவரது சுயகௌர வத்தைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளலாமா?இலங்கையில் அரசியல் என்பது சண்டி யர்களின் இருப்பிடமாக மாறிவிட்டது. அதை நிரூபிக்கும் வித மாகவே அண்மையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நடந்து கொண்டுள்ளார்.மேர்வின் சில்வா என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது அடாவடிகள்தான். இதற்கு முன்னர் அவரது இலக்குக்கு உள்ளாகியவர்கள் ஊடகவியலாளர்கள்தான். ஆனால் இப்போது அரச ஊழியர்களும் அவரின் அடாவடிக்கு உட்பட்டு நிற்கின்றனர்.நாட்டில் நீதிமன்றங்கள் இருக்கும் போது நாட்டின் அமைச்சர் நீதித்துறை அதிகாரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது. இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும். குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு வரவில்லை என்ற காரணத்தினாலேயே அவர் இவ்வாறு தண்டிக்கப்பட்டார். தன் குழந்தை சுக யீனமுற்றிருந் ததால்தான் வரவில்லை என்று அவர் தெரிவித்தும் கூட அமைச்சர் கடும் போக்கோடு நடந்து கொண்டுள்ளார்.ஆனால் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் எழுப்பியபோது குறித்த ஊழியரைத் தான் மரத் தில் கட்டவில்லை என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.உண்மையில் அவர் என்ன செய்தார் என்பதை சம்பவம் நடந்த அன்றே தொலைக் காட்சிகள் தெட்டத் தெளிவாகக் காட்டி இருந்தன. (ஊடகவி யலாளர்கள் அமைச்ச ராலேயே அழைத்துச் செல்லப்பட்டருந்தனர்) அமைச்சர் நாடாளுமன்றில் கூறியது போன்று குறித்த சமுர்த்தி ஊழியர் தானாக முன்வந்து தன்னை மரத்தில் கட்டிக் கொள்ளவில்லை என்பதை முழு மக்களுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் முழுப்பூசனிக் காயை சோற்றில் மறைத்தார். ஏனெனில் மக்களை அவர் முட் டாள்கள் என்று நினைத்தார். தான் சொல்வது எல்லாவற்றை யும் மக்கள் நம்புவார்கள் என்று அவர் கருதுகின்றார். தான் மக் களிடம் அக்கறை கொண்டிருக்கிறார் என்றும் அவர்களுக்காக எது வாக இருந்தாலும் செய்வேன் என்றும் எல்லோருக்கும் எடுத் துக்காட்டவே அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

0 comments:

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. பச்சைத்தமிழன் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger